இடைநிலை மற்றும் சாரியைகளை அறிந்து கொள்ளல்.
வினாவுக்கான விடையை சுருக்கமாக அணுகுதல்.

1. இடைநிலை என்றால் என்ன?
பகுபதத்தின் பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் நிற்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.
ஓதுவான்
ஓது + வ் + ஆன்
பகுதி இடைநிலை விகுதி
2.இடைநிலை எத்தனை வகைப்படும்? அவை எவை?
மூன்று வகைப்படும்.
அவையாவன:
பெயர் இடைநிலைகள்
வினை இடைநிலைகள் அல்லது காலங்காட்டும் இடைநிலைகள்
எதிர்மறை இடைநிலைகள்
3.பெயரிடைநிலைகள் எவை?
இச், ச், த், வ், ஞ் என்பனவாகும்.
உ+ம்:-
இச் - தச்சிச்சி (தச்சு + இச் + இ)
ச் - வலைச்சி (வலை + ச் + ச் + இ)
த் - ஒருத்தன் (ஒரு + த் + த் + அன்)
வ் - ஓதுவான் (ஓது + வ் + ஆன்)
ஞ் - அறிஞன் (அறி + ஞ் + அன்)
4.வினை இடைநிலைகள் எத்தனை வகைப்படும்? அவை எவை?
மூன்று வகைப்படும்.
அவையாவன:
இறந்தகால வினை இடைநிலைகள்
நிகழ்கால வினை இடைநிலைகள்
எதிர்கால வினை இடைநிலைகள்
5.இறந்தகால வினை இடைநிலைகள் எவை?
த், ட், ற், இன், ன் என்பனவாகும்.
உ+ம்:
த் - செய்தான் (செய் + த் + ஆன்)
ட் - உண்டான் (உண் + ட் + ஆன்)
ற் - தின்றான் (தின் + ற் + ஆன்)
இன் - ஓடினான் (ஓடு + இன்+ ஆன்)
ன் - போனான் (போ + ன் + ஆன்)
6.நிகழ்கால வினை இடைநிலைகள் எவை?
ஆநின்று, கின்று, கிறு என்பனவாகும்.
உ+ம்:
ஆநின்று - செய்யாநின்றான் (செய் + ஆநின்று+ ஆன்)
கின்று - செய்கின்றான் (செய் + கின்று + ஆன்)
கிறு - செய்கிறான் (செய் + கிறு + ஆன்)
7.எதிர்கால வினை இடைநிலைகள் எவை?
ப், வ், என்பனவாகும்.
உ+ம்:-
நடப்பான் (நட+ ப் + ஆன்)
செய்வான் (செய் + வ் + ஆன்
8.எதிர்மறை இடைநிலைகள் எவை?
இல், அல், ஆ என்பனவாகும்.
உ+ம்: இல் - நடந்திலன் (நட + ந் + த் + இல் + அன்)
அல் - உண்ணலன் (உண் + ண் + அல் + அன்)
9.சாரியை என்றால் என்ன?
பகுபதமொன்றில் விகுதிக்கு முன்னால் சார்ந்து வரும் இடைச்சொல் சாரியை எனப்படும்.
உ+ம்: படித்தனன் - (படி + த் + த் + அன் + அன் )
பகுதி சந்தி இடைநிலை சாரியை விகுதி
10.சாரியைகளாகக் கொள்ளப்படுபவை எவை?
அன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், ஆம், அ, ஆ, உ, ஏ, ஐ. கு, து, ன் போன்றனவாகும்.