வேற்றுமை விளக்கம், அதன் உருபுகள் மற்றும் பொருள்களின் விளக்கங்களை அறிதல்-05
வேற்றுமை சார்ந்த வினாக்களுக்கான விடைகளைச் சரியாக அணுகுதல்-05
1.பொருண் மயக்கம் என்றால் என்ன?
ஒரு வேற்றுமையின் உருபானது வெளிப்படாது நின்று தனக்குரிய பொருளைத் தரும் அதே வேளையில் பிற வேற்றுமைப் பொருளையுந் தருமாயின் அது பொருண்மயக்கம் எனப்படும்.
உ+ம்:- மரவேலி
இது மரத்திற்கு வேலி (4ம் வேற்றுமை), மரத்தினது வேலி (6ம் வேற்றுமை), எனப் பலவாறு வரும்.
பொன்மணி என்பது பொன்னாலாகிய மணி (3ம் வேற்றுமை) - பொன்னாகிய மணி (1ம் வேற்றுமை), பொன்னின் கண் மணி (3ம் வேற்றுமை), எனப் பலவாறாக பொருள் தருமாயின் அது பொருண்மயக்கம் எனப்படும்.
2. தன்மைப் பொருள் வேற்றுமை உருபை ஏற்கும் போது எவ்வாறு விகாரப்படும்?
தன்மைப் பெயர்கள் ஏற்கும் வேற்றுமை உருபு விகாரப்பட்டு வரும் விதம்
நான் ஐ என்னை
யாம் ஐ எம்மை
எங்கள் ஐ எங்களை
நாம் ஐ நம்மை
3. முன்னிலைப் பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது எவ்வாறு விகாரப்படும்?
முன்னிலைப் பெயர் ஏற்கும் வேற்றுமை உருபு விகாரப்பட்டு வரும் விதம்
நீ ஐ உன்னை
நீர் ஐ உம்மை
நீங்கள் ஐ உங்களை
4.படர்க்கைப் பெயர்கள் வேற்றுமை உருபை ஏற்கும் போது எவ்வாறு விகாரப்படும்?
படர்க்கைப் பெயர் ஏற்கும் வேற்றுமை உருபு விகாரப்பட்டு வரும் விதம்
அவன் ஐ அவனை
அவள் ஐ அவளை
அது ஐ அதை
தான் ஐ தன்னை
தாம் ஐ தம்மை
தாங்கள் ஐ தங்களை
5. வினையையும், பெயரையும் கொண்டு முடியும் வேற்றுமைகள் எவை?
நான்காம் வேற்றுமை
உ+ம் கூலிக்கு உழைத்தான் (வினை)
நோய்க்கு மருந்து (பெயர்)
ஏழாம் வேற்றுமை
உ+ம்: மலையின் கண் அருவி வீழ்ந்தது.(வினை)
மணியின் கண் ஒளி (பெயர்)
6. பெயரைக் கொண்டு முடியும் வேற்றுமைகள் எவை?
ஆறாம் வேற்றுமை உ+ம்: சாத்தனது கை
ஐந்தாம் வேற்றுமை உ+ம்: இலங்கையின் வடக்கு
7. வினையைக் கொண்டு முடியும் வேற்றுமைகள் எவை?
இரண்டாம் வேற்றுமை உ+ம்: குடத்தை வனைந்தான்.
மூன்றாம் வேற்றுமை உ+ம்: வாளால் வெட்டினான்.
எட்டாம் வேற்றுமை உ+ம்: மகனே வா.