பூங்கா

தரம் 2 பாடம் 22.1

 

பூங்கா

அன்று ஞாயிற்றுக்கிழமை எமக்குப் பாடசாலை விடுமுறை நாளாகும். நான் எனது அம்மா, அப்பாவுடன் சிறுவர் பூங்காவிற்குச் சென்றிருந்தேன். அங்கு பல  வண்ணப் பூக்களைக் கண்டு மகிழ்ந்தோம். வித விதமான மல்லிகைப் பூக்களையும் பல வர்ணங்கள் கொண்ட ரோஜாப்பூக்களையும் கண்டோம். மற்றும் சூரியகாந்திப் பூவையும் கண்டோம். அதுமட்டுமல்லாமல் மாலைப்பொழுதில் பூக்கும் வாடாமல்லி, குண்டுமல்லி மற்றும் பல பூக்களையும் கண்டு மகிழ்ந்தோம். அங்கு அழகான வண்ணத்துப்பூச்சிகள் பூக்களில் மொய்ப்பதைப் பார்த்து, ரசித்து, மகிழ்ந்தோம்.

 

பிள்ளைகளே! நீங்களும் உங்கள் வீடுகளில் அழகிய மரங்களை நட்டு பூங்கா ஒன்றை உருவாக்குங்கள்.