எழுத்திலக்கணங்களை அறிதல்–04

கீழுள்ள வினாவுக்கான விடையைச் சுருக்கமாகத் தருதல்.

11. பன்னிரண்டு உயிரும் எவ்வாறு மொழிமுதலாக வரும்? 

அ - அம்மா   உ - உரல்   ஐ - ஐயம் 

ஆ - ஆமை  ஊ - ஊர்     ஒ - ஒன்று 

இ - இலை   எ – எறும்பு   ஓ - ஓடம் 

ஈ - ஈட்டி     ஏ - ஏணி    ஒள - ஔடதம் 

 

12. ஙகரமெய் எந்தெந்த உயிர்களோடு சேர்ந்து உயிர்மெய்யாகி மொழி முதலாகி வரும்? 

ஙகர மெய்யானது சுட்டெழுத்தின் பின்னும், எ, யா, எனும் வினாவெழுத்தின் பின்னும் அகரத்துடன் சேர்ந்து மொழி முதலாகி வரும். 

உ+ம்: 1) சுட்டின்பின் வருதல்    2) வினா எழுத்தின் பின்வருதல்   

            அங்ஙனம்                                             எங்ஙனம்?

            இங்ஙனம்                                             யாங்ஙனம்?

             உங்ஙனம்

 

13. மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் எத்தனை? அவை யாவை? 

மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துக்கள் மொத்தம் இருபத்து நான்காகும்.   

அவையாவன:

 உயிர் எழுத்துக்கள்           12

 மெய் எழுத்துக்கள்           11

 குற்றியலுகரம்                  01

 மொத்தம்                            24

 

14. பன்னிரண்டு உயிரும் எவ்வாறு மொழிக்கு இறுதியாகி வரும்?

 அ - பல                உ - கொடு              ஐ - தை 

 ஆ – பலா          ஊ - பூ                       ஒ - நொ (துன்பப்படு) 

 இ - தரி              எ - சேஎ                     ஓ - போ 

 ஈ – தீ                  ஏ - தே                       ஔ - கௌ .

எ என்பது செய்யுளிலேயே பெரும்பாலும் மொழிக்கு இறுதியாக வரும்.

 

15. மொழிக்கு இறுதியாக வரும் மெய்யெழுத்துக்கள் எவை? 

ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள், எனும் பதினொன்றுமாகும்.

உ+ம்:

ஞ் - உரிஞ் (உறுஞ்சு)   ன் - பொன்      வ் - தெவ் (பகை) 

ண் – கண்                      ய் - நாய்            ழ் - யாழ் 

ந் – வெரிந் (முதுகு)     ர்  - வேர்             ள் - வாள் 

ம் – மரம்                        ல் – பல்

 

மேலும் பாடங்கள்